|
Moondru Mugam

ரஜினிகாந்த் மூன்று
வேடங்களில் நடித்த "மூன்று முகம்'', அவருடைய முழுத்
திறமையையும் வெளிப்படுத்தியது.
குறிப்பாக, அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி
வேடத்தில் மிடுக்காகவும், கம்பீரமாகவுமë பேசி எல்லோரையும்
பிரமிக்க வைத்தார்.
ஆர்.எம்.வீரப்பனின் "சத்யா மூவிஸ்'' தயாரித்த சூப்பர் ஹிட்
படம் இது. கதையை பீட்டர் செல்வகுமார் எழுத, ஆர்.எம்.வி.
திரைக்கதை அமைத்தார். பிறகு செல்வகுமார் வசனம் தீட்டினார்.
ஏ.ஜெகந்நாதன் டைரக்ட் செய்தார்.
கதை
திருப்பங்களும், நெஞ்சைத் தொடும் சம்பவங்களும் நிறைந்த படம்
"மூன்று முகம்.''
நேர்மையும், கண்டிப்பும் நிறைந்த போலீஸ் "டி.எஸ்.பி''
அலெக்ஸ் பாண்டியன், தனது எல்லைக்குள் நடமாடும் கள்ளச்சாராய
கோஷ்டிகளை களையெடுக்கிறார். இதனால் லட்சக்கணக்கில் நஷ்டத்தை
சந்திக்கும் கள்ளச்சாராய கும்பலின் தலைவன் (செந்தாமரை)
டி.எஸ்.பி.யை கொல்ல முடிவெடுக்கிறான். அதற்கான தருணத்தை
எதிர்நோக்கி காத்திருக்கிறான்.
மர்மக்குரல்
அலெக்ஸ் பாண்டியனìன் மனைவி ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணி.
பிரசவ வலி எடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறாÖë.
மனைவியை பார்க்க ஆஸ்பத்திரி வரும் வழியில் அலெக்ஸ்
பாண்டியனுக்கு போன் வருகிறது. போனில் பேசிய பெண், ஒரு
பாழடைந்த பங்களாவில் தன்னை அடைத்து வைத்து சித்ரவதை
செய்கிறார்கள்'' என்று பதட்டமாய் கூறியவள், தான் கடத்தி
வைக்கப்பட்டிருக்கும் பங்களா இருக்கும் இடத்தையும் கூறி
தன்னைக் காப்பாற்ற வரும்படி கதறுகிறாள்.
இந்தப் போனுக்குப் பின்னணியில் தன்னை கொல்ல
வகுக்கப்பட்டிருக்கும் சதித்திட்டம் பற்றி அறியாத அலெக்ஸ்
பாண்டியன், தனியாளாய் அந்த பங்களாவுக்குள் போகிறார்.
அவருக்காக காத்திருந்த சாராயக்கும்பலின் தலைவனும், அவனது
அடியாட்களும் அலெக்ஸ் பாண்டியனை தாக்கி கொன்று
விடுகிறார்கள்.
இரட்டைக் குழந்தைகள்
அலெக்ஸ் பாண்டியன் இறந்த அதே நேரத்தில் அவரது மனைவிக்கு
இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டுமே ஆண் குழந்தைகள்.
குழந்தை பிறந்த அதே நேரம் `ஜன்னி' வந்து தாயும் உயிர்
விடுகிறாள்.
பிரசவத்துக்கு துணையாக வந்த அலெக்ஸ் பாண்டியனின் தாயார்
சகாயமேரி, மகன் - மருமகள் இருவரும் ஒரே நேரத்தில் இறந்த
சம்பவத்தால் அதிர்ச்சி அடைகிறார். குழந்தைகளை
வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைக்கிறாள்.
அதே ஆஸ்பத்திரியில் பணக்காரர் ஒருவரின் மனைவியும்
பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு
ஏற்கனவே இரண்டு முறை குழந்தை இறந்தே பிறந்ததால்,
இம்முறையாவது குழந்தை உயிருடன் பிறக்கவேண்டுமே என்ற கவலை.
ஆனால் இம்முறையும் குழந்தை இறந்தே பிறக்க, அது தெரியாமல்
அவள் மயக்க நிலையில் இருக்கிறாள்.
சகாயமேரியிடம் இருக்கும் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை
பணக்காரர் கேட்கிறார். தனது குழந்தை உயிருடன் இருக்கிறது
என்று தெரிந்தால் மட்டுமே மனைவியை உயிரோடு பார்க்க முடியும்
என்று கண்களில் நீர் மல்க அவர் சொன்னதால், இரண்டு ஆண்
குழந்தைகளில் ஒன்றை பணக்காரரிடம் சகாயமேரி கொடுக்கிறாள்.
சகாயமேரியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, அவளிடம்
இருக்கும் மற்றொரு குழந்தையை வளர்க்க மாதந்தோறும் பணம்
அனுப்பி வைக்கிறார்.
சகாயமேரியின் பொறுப்பில் வளரும் குழந்தை `ஜான்' என்ற
பெயரிலும், பணக்காரரிடம் வளரும் குழந்தை `அருண்' என்ற
பெயரிலும் வளர்கிறார்கள். ஜான் அதிரடி, அடிதடி, ஜாலி என்று
உருவாக, அருண் மேற்படிப்புக்காக அமெரிக்கா போகிறான்.
பிறந்த
நாள்
படிப்பை முடித்து ஊருக்கு வரும் அருண் தனது 25-வது பிறந்த
நாளை தடபுடலாக கொண்டாடுகிறான். இந்த விழாவுக்கு
கள்ளச்சாராய தலைவனின் அடியாளாக இருந்து இப்போது தொழிலதிபர்
அந்தஸ்தில் இருக்கும் சங்கிலிமுருகனும் அழைக்கப்பட்டு
இருக்கிறார்.
பிறந்த நாள் `கேக்'கை வெட்ட அருண் கத்தியை கையில்
எடுக்கும்போது, கேக்கில் ஒரு காட்சி அருண் கண்ணுக்கு
தெரிகிறது. அலெக்ஸ் பாண்டியனை கள்ளச்சாராய கும்பலின் தலைவன்
செந்தாமரை கத்தியால் குத்துவதாக விரியும் அந்தக் காட்சியை
பார்த்த அருண், ஆவேசமாகிறான். தொழிலதிபர் சங்கிலிமுருகனின்
சட்டையைப் பிடித்து இழுத்து உலுக்கியவன், "எங்கேடா உங்க
பாஸ்?'' என்று கேட்கிறான்.
இந்த தகவல் செந்தாமரைக்குப்போக, அவர் துப்பறிந்து அலெக்ஸ்
பாண்டியன் சாய லில் இருக்கும் அருண், பணக் காரரின் மகனல்ல,
அலெக்ஸ் பாண்டியனின் மகனே என்பதை அறிந்து கொள்கிறார்.
இதனால் அவனையும் கொன்றுவிட திட்டம் தீட்டுகிறார். இதற்குள்
அருணுக்கும் தனக்குள் தோன்றிய அந்த திடீர் உணர்வுக்கு விடை
கிடைக்கிறது. தங்கள் அலுவலக பொறுப்பை மேற்கொள்ளும் அருண்,
சகாயமேரி என்ற பெண்ணுக்கு தனது அப்பா மாதாமாதம் பணம்
அனுப்பி வரும் தகவலை தெரிந்து கொள்கிறான். அதற்கான காரணத்தை
தெரிந்து கொள்ளும் பொருட்டு சகாயமேரியின் இருப்பிடம்
வருகிறான். அங்கே வந்த பிறகுதான், அலெக்ஸ் பாண்டியனுக்கு
பிறந்த இரண்டு குழந்தைகளில் தானும் ஒருவன் என்ற உண்மை
தெரியவருகிறது.
பழிக்குப்பழி
இரட்டை சகோதரர்கள் தங்கள் தந்தையை கொன்ற செந்தாமரை கும்பலை
பழிவாங்க புறப்படுகிறார்கள். இதில் ஜான் முந்திக்கொண்டு,
கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த செந்தாமரையின் ஆட்களை
வெறியுடன் கொல்கிறான். விபரீதம் உணர்ந்த செந்தாமரை, தன்னைக்
காப்பாற்றிக்கொள்ள ஜானை கத்தியால் குத்தி சாய்க்கிறார்.
அந்தக் கத்தியை பிடுங்கி செந்தாமரையின் வயிற்றில் கத்தியை
பாய்ச்சுகிறான் ஜான்.
செந்தாமரை உயிரை விட்டுவிட, குற்றுயிராய் கிடக்கும் ஜானை
தனது மடி மíது தூக்கி வைத்து கதறுகிறான் அருண். தனது
தந்தையை கொன்ற கும்பலை பழிதீர்த்த நிம்மதியில், தம்பி
அருணின் மடியில் உயிரை விடுகிறான், ஜான்.
மூன்று வேடங்களில் நடித்த ரஜினிக்கு இரண்டு ஜோடிகள்.
அலெக்ஸ் பாண்டியனுக்கு ராஜலட்சுமி, அருணுக்கு ராதிகா.
ஜானுக்கு ஜோடி இல்லை.
வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த இந்தப்படம் மகத்தான வெற்றி
பெற்றது. மூன்று வேடங்களையும், வெகு எளிதாக ஊதித்தள்ளி,
ரசிகர்களைக் கவர்ந்தார், ரஜினி.
இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர்கள் சங்கர்-கணேஷ்.
|