|
Athisaya
Piravi
ரஜினிகாந்த் புதுமாதிரியான வேடம் தாங்கி நடித்த படம் "அதிசயப்பிறவி.''
தெலுங்கில் பிரமாண்டமான படங்கம் எடுப்பதில் புகழ் பெற்ற
ஏ.பூர்ணசந்திரராவ், தமது லட்சுமி புரொடக்ஷன்ஸ் சார்பில் "யமுடிக்கி
மொகுடு'' என்ற படத்தைத் தயாரித்தார்.
அதை அவரே, "அதிசயப்பிறவி'' என்ற பெயரில் தமிழில்
தயாரித்தார். எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.
பஞ்சு அருணாசலம் வசனம் எழுத, இளையராஜா இசை அமைத்தார்.
புது மாதிரியான கதை.
ரஜினி இரண்டு வேடத்தில் நடித்த படம். எமலோக கலாட்டாக்களில்
ரசிகர்களை கலகலக்க வைத்த படம்.

ஒரு ரஜினி அப்பாவி. இன்னொரு ரஜினி `அடிதடி' பேர்வழி.
தவறு எங்கே நடந்தாலும் தட்டிக் கேட்கும் ரஜினி, காதலி
ஷீபாவுடன் (இந்தி நடிகை) ஆட்டம், பாட்டம் என்று ஜாலி
பண்ணுகிறார்.
அப்பாவி ரஜினி, பணக்காரர். பெற்றோர் சதிகாரர்களால்
கொல்லப்பட்ட நிலையில் ரவுடி செந்தாமரையிடம் வளர்கிறார்.
ரஜினி வாலிப பருவத்தை எட்டியதும் உயில்படி சொத்து அவர்
கைக்கு வந்துவிடும். அப்போது சொத்தை பிடுங்கிக்கொண்டு அவரை
தீர்த்துவிடவேண்டும் என்பது செந்தாமரையின் திட்டம்.
எமலோகத்தில் குழப்பம்
இந்த நேரத்தில் எமலோகத்தில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. யாரோ
ஒருவனின் உயிரைப் பறிக்க வந்த சித்திரகுப்தன் தவறுதலாக `அடிதடி'
ரஜினியின் உயிரைப் பறித்து விடுகிறான். எமலோகத்தில்
எமதர்மன் ரஜினியைப் பார்த்து குழப்பம் அடைகிறான்.
அப்போதுதான் ஆம் மாறாட்டம் தெரியவருகிறது. ரஜினியிடம், "நீ
திரும்பவும் பூலோகம் சென்றுவிடு'' என்கிறார், எமதர்மன்.
அதற்கும் ஒரு விபரீதம் நடந்து விடுகிறது. `அடிதடி'
ரஜினியின் உடலை அவரது உறவினர்கம் எரித்து விடுகிறார்கம்.
இதனால் கோபத்துடன் மறுபடியும் எமலோகத்தில் எமதர்மனை
சந்திக்கிறார், அடிதடி ரஜினி. "நீ விரும்பினால் யாருடைய
உடலிலாவது சேர்ந்து கொம்ளலாம்'' என்று அவரை தாஜா செய்கிறார்,
எமதர்மன். சம்மதிக்கும் அடிதடி ரஜினியிடம் பல `ரஜினி'க்கம்
காட்டப்படுகிறார்கம். (ரஜினி நடித்த படங்களில் அவர் நடித்த
கேரக்டர்களை ஒவ்வொன்றாக காட்டுகிறார்கம்) இது எதையும்
பிடிக்காத `அடிதடி' ரஜினி, கடைசியில் அப்பாவி ரஜினியை `ஓகே'
சொல்கிறார்.
இப்போது அப்பாவி ரஜினியின் உடலுக்கும் `அடிதடி' ரஜினியின்
ஆத்மா புகுந்து கொம்கிறது. இது தெரியாத செந்தாமரையின்
ஆட்கம், சொத்தை தங்கம் பெயருக்கு மாற்றித்தர
மிரட்டுகிறார்கம். ரஜினி கொடுக்கிற அடி உதையில் ஆளுக்கு ஒரு
திசைக்கு எகிறிப் பறக்கிறார்கம்.
அப்பாவி ரஜினியை விரும்பிய கனகாவுக்கு, நடந்தது எதையும்
நம்பமுடியவில்லை.
தொடர்ந்து ரஜினியின் அடிதடியில் செந்தாமரை கோஷ்டி ஓட்டம்
பிடிக்கிறது.

இரு மனைவிகம்
ஏற்கனவே அடிதடி ரஜினியின் ஜோடியான ஷீபா, அப்பாவியை
விரும்பிய கனகா இருவருக்கும் இப்போது இந்த ஒரே ரஜினிதான்
துணை. சூழ்நிலை உணர்ந்த ரஜினி இருவரையும் மணந்து கொண்டு
காதலியர் பிரச்சினையையும் முடிவுக்கு கொண்டு வருகிறார்.
படம் முழுக்க ஜாலி மயம். குறிப்பாக எமலோகத்தில் எமதர்மன்
வினுசக்ரவர்த்திக்கும், ரஜினிக்குமான கலாட்டாக்கம்
ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது.
"சிங்காரி பியாரி பியாரி'', "உன்னைப் பார்த்த நேரம்'', "யார்
வந்தது நெஞ்சுக்கும்ளே'', "பாட்டுக்கு பாட்டெடுக்கவா''
போன்ற பாடல்கம் ரசனைக்குரியவை.
படத்தில் "சோ'', நாகேஷ், செந்தாமரை, வி.கே.ராமசாமி தவிர, `கிழக்கே
போகும் ரெயில்' படத்தில் பாரதிராஜாவால் கதாநாயகனாக அறிமுகம்
செய்யப்பட்ட சுதாகரும் நடித்திருந்தனர். படத்தில் வில்லனும்
இவரே. காமெடியும் இவரே.
மாதவி, கவுரவ வேடத்தில் தோன்றினார்.
நிறைய செலவு செய்து, பிரமாண்டமான செட்டுகம் அமைத்து படம்
எடுத்திருந்த போதிலும், ரஜினி ரசிகர்களை கதை கவரவில்லை.
15-6-1990ல் வெளிவந்த இப்படம் 75 நாட்கம் ஓடியது.
|