Related Articles
Which is your favourite pic of Superstar Rajinikanth with a gun?
நாடி நரம்பு முறுக்க.. அரங்கம் தெறிக்க - மாஸ் காட்டும் அண்ணாத்த மோசன் போஸ்டர்
அமெரிக்க ஷேர் மார்க்கெட்டில் ரஜினி ரசிகர் - புராஜெக்ட் சூப்பர்ஸ்டார்
40 Years of நெற்றிக்கண்
ஜப்பானில் தர்பார் திருவிழா - ஜப்பானில் சாதனை படைத்தது தர்பார்
மக்கள் மன்றம் கலைப்பு, ரசிகர் மன்றம் தொடரும், அரசியலில் ஈடுபடப்போவதில்லை - ரஜினி
Superstar Rajinikanth Buzz : June 2021
The story behind this autograph from Superstar Rajinikanth - Reporter Dhanya Rajendran
முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் ரஜினிகாந்த்: ட்விட்டரில் மகள் சவுந்தர்யா பகிர்வு

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
அண்ணாத்த முதல் பாடல் ரிலீஸ் ஆனது: மீண்டும் தூள் கிளப்புது ரஜினி எஸ்.பி.பி. காம்போ
(Saturday, 9th October 2021)

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவரவிருக்கும் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. எஸ்.பி.பி குரலில் வெளிவரும் கடைசி பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல்தான் எஸ்.பி.பி. கடைசி பாடல் என இதன் பாடலாசிரியர் விவேகாவும், டி.இமானும் அவர் மறைந்த சில நாள்களுக்கு பின் பாடல் பதிவின் புகைப்படங்களுடன் பகிர்ந்திருந்தனர். இந்த நிலையில், வரும் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு 'அண்ணாத்த' படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என்று படக்குழு சில தினங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. அதேபோல இன்றைய தினம் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி., ரஜினிக்கே உரித்தான கனீர் குரலில் ‘அண்ணாத்த வரேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீச’; ‘உலகினில் அழகு எது சொல்லவா... எதிரிக்கும் இரங்கும் குணமல்லவா! உயர்தர வீரம் எது சொல்லவா... சுயதவறுணரும் செயலல்லவா’ என பாடியுள்ளார். வழக்கமான ரஜினி பாடலுக்கே உரித்தான வகையில் ஸ்டைலாக மாஸாக பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனாலேயே என்னவோ பாடலிலேயே ‘அண்ணாத்த மாஸூக்கே பாஸூ’ என்றும் வரி வைத்துவிட்டார்கள்.

முன்னதாக, SPB இன் முதல் நினைவு நாளான செப்டம்பர் 25 அன்று எஸ்.பி.பி குரலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த பாடல் வெளியிடப்படும் என கூறப்பட்டது. எனினும், SPB இன் முதல் நினைவு நாளுக்குப் பிறகு பாடல் வெளியிடப்படும் என்று பின்னர் கூறப்பட்டது.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ள ரஜினிகாந்த்,  “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின்போது, இதுதான் அவர் எனக்கு பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலில் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.






 
0 Comment(s)Views: 987

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information