Related Articles
கொரோனா 2வது அலை குறித்து அன்றே சொன்ன ரஜினி
விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது: ரஜினி இரங்கல்
இயக்குனர் விக்ரம் தலைவரோடு ஒரு பேட்டி - குமுதம் 1990
தமிழக சட்டமன்ற தேர்தல் : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாக்களித்தார்!
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே உயரிய விருது
February 2021 - Rajini Buzz
Superstar Rajinikanth visits Maestro Ilaiyaraaja new studio
Bollywood movie Hum completes 30 years today
தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயல் வீரர்கள் கூட்டம் அமோகமாக நடைபெற்றது
போகிறவர்கள் தாராளமாகப் போகலாம்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
உண்மைகள் சொல்வேன் - கலைப்புலி எஸ்.தாணு
(Thursday, 29th April 2021)

விவேக்கைப் பற்றி நினைக்கும்போது அவரது குருநாதர் கே.பாலசந்தர் சார் நினைவுக்கு வருகிறார். 2007-ம் ஆண்டு ஒருநாள் பாலசந்தர் சார் என்னை அழைக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனை அருகே மூகாம்பிகை காம்ப்ளெக்ஸில் 5,000 சதுர அடியில் அவருக்குச் சொந்தமான ஓர் இடம் இருக்கிறது. ‘`உடையார் மகனிடம் பேசி அதை அடமானம் வைத்து எனக்குப் பணம் வாங்கிக்கொடு’’ என்கிறார். ‘`என் பையன் கைலாசம் தெரியாத்தனமா ஒரு புராஜெக்டைக் கையில எடுத்துட்டு, என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கான்யா. அவன் முகத்தை என்னால பார்க்கவே முடியலை. ரொம்ப வேதனையா இருக்குய்யா’’ என மனம் உடைகிறார். நான் உடனே ‘`சார், ரஜினி சாரிடம் டேட் கேட்கலாமே’’ என்கிறேன். ‘`எவ்ளோயா பண்ணுவான்... இன்னும் எவ்ளோதான்யா பண்ணுவான்... எத்தனை தடவையா நான் அவன்கிட்ட போய்க் கேட்குறது… எத்தனையோ முறை அவன் எனக்கு உதவி பண்ணிட்டான்யா’’ என்கிறார். பாலசந்தர் சார் மனம் உடைந்து கலங்கியதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வதென்று ஒரே யோசனை.

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என எல்லா நல்ல நாள்களிலும் ரஜினி சாருக்கு போன் செய்து வாழ்த்து சொல்லி, அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவது என் வழக்கம். அப்போதும் ஒரு நல்ல நாள் வருகிறது. ரஜினி சாருக்கு போன் அடிக்கிறேன். ‘`சார், ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சார். உங்க டைம் வேண்டும்’’ என்கிறேன். ‘`அடுத்த வாரம் பேசிடலாம் தாணு’’ என்கிறார். இதற்கிடையே ‘சிவாஜி’ படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் மைசூர் செல்லவேண்டிய சூழல் வருகிறது. சென்னை விமான நிலையத்தில் நான் ஹைதராபாத் செல்வதற்காகக் காத்திருக்கிறேன். ரஜினி சாரும் மைசூர் போவதற்காக வருகிறார். விமான நிலையத்துக்குள் என்னைப் பார்த்தவர் வேக வேகமாக வந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டார். ‘`சார், பர்சனலா ஒரு விஷயம் பேசணும். தள்ளிட்டே போகுது சார்’’ என்கிறேன். ‘`11 நாள்தான் ஷூட்டிங் தாணு. திரும்ப சென்னை வந்ததும் மீட் பண்ணிடலாம்’’ என்கிறார். ஆனால், அவர் திரும்பி வந்தபிறகும் பேசும் சூழல் இல்லை.

இங்கே பாலசந்தர் சாரின் பிரச்னையும், அவரது மன உளைச்சலும் உச்சத்துக்குப் போகின்றன. இனியும் தாமதிக்கக்கூடாது என ரஜினி சாரை போனில் அழைக்கிறேன். ‘`சார், பாலசந்தர் சார் பெரிய பிரச்னையில் இருக்கிறார்’’ என, நடந்த சம்பவத்தைச் சொல்லிவிட்டு ‘`கே.பி-க்கு 80 வயசு ஆகப்போகுது. இப்ப நீங்க அவருக்கு ஒரு படம் பண்ணீங்கன்னா நல்லாருக்கும்’’ என்கிறேன். ‘`கே.பி சார் எப்போது இந்த விஷயத்தை உங்களிடம் சொன்னார்?’’ என்றார் ரஜினி சார். ‘‘ஒரு மாசத்துக்கு மேல ஆகுது சார்’’ என்கிறேன். ‘`நீங்க நாளைக்குக் காலைல வீட்டுக்கு வந்துடுங்க’’ என்கிறார். அடுத்த நாள் வீட்டுக்குப்போய் நடந்த விஷயங்கள், இயக்குநர் சிகரத்தின் பிரச்னைகள் எல்லாவற்றையும் சொல்கிறேன். ‘`சரி தாணு, நாம ரெண்டு பேரும் பேசின விஷயத்தை யார்கிட்டயும் சொல்லிக்காதீங்க’’ என்று என்னை அனுப்பிவைக்கிறார்.

இந்த இடத்தில் ரஜினி சார் என்னை மன்னிக்கவேண்டும். இந்த விஷயத்தை நான் ஏன் இப்போது வெளியே சொல்கிறேன் என்றால், நன்றி மறக்கக்கூடியதாக இன்றைய உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. அதுவும் சினிமா உலகம் இதில் உச்சம். தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர், தன்னுடைய குருநாதர் ஒரு கஷ்டத்தில் இருக்கிறார் என்றதும், ‘தான் எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும், தனக்கு எப்படிப்பட்ட சங்கடங்கள் இருந்தாலும் உடனடியாக உதவவேண்டும்’ என்கிற ரஜினி சாரின் நல்ல மனம் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன். ரஜினி சாரிடம் பேசிவிட்டு வெளியே வந்ததுமே கே.பி சாரிடம் விஷயத்தைச் சொன்னேன்.

அடுத்த நாள் கே.பி சாரிடமிருந்து போன் வந்தது. ‘`யோவ், ரொம்ப தேங்க்ஸ்யா… ரஜினி போன் பண்ணான்யா. ‘கதை பறையும்போல்’னு ஒரு மலையாளப் படத்தை ஒருமுறை பார்த்துடுங்கன்னு சொன்னான். நான் ஏற்கெனவே பார்த்துட்டேன்னு சொன்னேன். ‘சரி, அப்ப நான் வீட்டுக்கு வரேன்’னு சொல்லிட்டு உடனே நேரா வீட்டுக்கு வந்துட்டான்யா. வந்ததுமே ‘இந்தப் படம் நாம பண்றோம்’னு சொல்லிட்டான்யா. ரொம்ப நன்றிய்யா’’ என்றார். ‘`சார், அவர் உங்களுக்குச் செய்யவேண்டியது கடமை சார். உண்மையான சிஷ்யன்னா ரஜினி சார்தான். உங்களுக்கு ஒரு கஷ்டம்னதும் ஓடி வந்து நிற்கிறார் பாருங்க’’ என்றேன். ‘`நாளைக்கு வீட்டுக்கு வாய்யா’’ என்றார். அடுத்த நாள் காலை அவர் வீட்டுக்குப் போனேன். என்னை அப்படியே சில நிமிடங்கள் கட்டிப்பிடித்துக்கொண்டார். அந்த அன்பின் கதகதப்பை என்னால் இப்போதும் உணரமுடிகிறது.

‘குசேலன்’ படம் நல்லபடியாக முடிந்தது. சில விஷயங்களையெல்லாம் கே.பி செட்டில் செய்தார். ஆனால், சில காலங்கள் கழித்து மீண்டும் அவருக்கு ஒரு பிரச்னை. என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘`சார், ஆழ்வார்பேட்டை சிஷ்யர்கிட்ட சொல்லலாமே’’ என்றேன். ‘`நான் என்னன்னுய்யா போய்ச் சொல்றது. அவங்களுக்கே தெரியும்யா. ‘உத்தம வில்லன்’ படத்துல நடிச்சேன், 10 லட்சம் ரூபாய் செக் கொடுத்திருக்கார்யா. இல்ல, வேணாம்யா... செத்துடுறேன்யா… நான் செத்துடுறேன்’’ என மிகவும் மனம் வருந்திப் பேசினார்.

நன்றி : விகடன்






 
0 Comment(s)Views: 636

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information