SONG LYRIC MOVIE LISTS
2.0
Aarulirunthu Arupathuvarai
Adutha Vaarisu
Anbuku Naan Adimai
Anbulla Rajinikanth
Annai Oru Aalayam
Annamalai
Annaatthe
Arunachalam
Adhisaya Piravi
Baasha
Baba
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmaudham
Dharmadurai
Dharmathin Thalaivan
Ejamaan
Engeyo Ketta Kural
Endhiran
Garjanai
Guru Sishyan
Jailer
Johnny
Kaala
Kaali
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mapillai
Maveeran
Moondru Mugam
Mr Bharath
Mullum Malarum
Murattu Kaalai
Muthu
Naan Adimai Illai
Naan Mahan Alla
Naan Potta Saval
Naan Sigappu Manithan
Naan Vazha Vaippen
Nallavanukku Nallavan
Nattukku Oru Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padayappa
Padikathavan
Panakkaran
Pandian
Paayum Puli
Petta
Pokkiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raja Chinna Roja
Rajathi Raja
Ranga
Ranuva Veeran
Siva
Sivaji
Sivappu Sooriyan
Sri Ragavendra
Thaai Veedu
Thaai Meethu Sathiyam
Thalapathy
Thambikku Entha Ooru
Thanga Magan
Thanikattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaippali
Valli
Veera
Velaikaran
Viduthalai
* Rajini MP3 Songs
* Audio Cover Photos

  Join Us

Rajini Song Lyrics

Ejamaan

எஜமான் காலடி

Movie Ejamaan Music Ilaiyaraaja
Year 1993 Lyrics Vaali
Singers Malaysia Vasudevan

எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்
எங்க எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்
எங்க எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்
உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி
உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்
எங்க எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்

ஊருஜனம்தான் வாழ நல்ல காலம் வந்தாச்சு
நேத்துவர நான்பார்த்த துன்பம் யாவும் போயாச்சு
வீடு வர ஆத்துத் தண்ணி வந்து தாகம் தீர்த்தாச்சு
வீதியெல்லாம் பள்ளிக்கூட பெல்லு ஓச கேட்டாச்சு
இல்லாமை இங்கு கிடையாது எங்க எஜமான் இருக்கையிலே
பொல்லப்பு நம்ம நெருங்காது எஜமான் காவலிலே
உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்
எங்க எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்

தோட்டம் காடுமேடெல்லாம் சொந்தம் தேடும் தொழில்லாலி
ஊருக்கொரு கஷ்டம் வந்தா பங்குபோடும் பாட்டாளி
உள்ளபடி நீதி சொல்ல தேவை இல்ல நாற்காலி
தன்னால வணங்குது ஓரு எங்க எஜமான் நடக்கையிலே
என்னாலும் குறை கிடையாது எஜமான் இங்கு இருக்கையிலே
உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்
எங்க எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்
உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி
உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்
எங்க எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்

 

 

நிலவே முகம்

Movie Ejamaan Music Ilaiyaraaja
Year 1993 Lyrics Vaali
Singers S. Janaki

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

பெண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

ஆண் : நிலவே முகம் காட்டு

***

பெண் : பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

ஆண் : காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா

பெண் : நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

ஆண் : எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

பெண் : அணைத்தேன் உனையே இது தாய் மடியே

***

ஆண் : சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை மீறும் கண்ணின் நீரென்றால்
தினம் துடிப்பவன் நானே

பெண் : மாலையோடு நடக்கும் தேரய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரய்யா
உன்னை மீற யாரய்யா

ஆண் : மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே

பெண் : இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு

ஆண் : இளம் பூங்கொடியே இது தாய் மடியே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

 

ஒரு நாளும் உனை

Movie Ejamaan Music Ilaiyaraaja
Year 1993 Lyrics Vaali
Singers S. P. Balasubrahmanyam, S. Janaki

பெண்குழு : கங்கணகணவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க

ஒரு சுயம்வரம் நடக்கிறதே.. இது சுகம் தரும் சுயம்வரமே

பெண்குழு : ஆ...ஆ..ஆ..ஆ..

பெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

ஆண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

பெண்குழு : தனனனனனா தனனனனனா தனனனனனா
தனனனன னானானானானா

***

பெண் : சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்

ஆண் : உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன்

பெண் : தோகை கொண்டு நின்றாடும் தேன்கரும்பு தேகம்

ஆண் : முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்

பெண் : அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

ஆண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே

பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

பெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

***

ஆண் : கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே

பெண் : உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா

ஆண் : ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே

பெண் : ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே

ஆண் : முத்தினம் வரும் முத்து தினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று

பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

பெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

ஆண் : உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

பெண் : விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

ஆண் : இணையான இளமானே துணையான இளமானே

பெண் : ஓ..எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

 

ஆலப்போல் வேலப்

Movie Ejamaan Music Ilaiyaraaja
Year 1993 Lyrics Vaali
Singers S. P. Balasubramaniam

பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ..ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

பெண்குழு : தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்துதா தும்தும்
தும்தும்தும்துதா தும்தும் தும்துதா தும்தும் தும்தும்

***

பெண் : எம்மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு

பெண்குழு : ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஒ...ஓ...ஒ...

ஆண் : கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு
மீனாட்சிக் குங்குமத்தை... நெத்தியிலே சூடச் சொல்லு

பெண் : சொன்னத நானும் கேட்குறேன் சொர்ணமே அங்கபோய் கூறிடு

ஆண் : அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு

பெண் : மாமன் நெனைப்புத்தான் மாசக்கணக்கிலே பாடா படுத்துது
என்னையே புது பூவா வெடிச்ச பின்னையே

ஆண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

***

ஆண் : வேலங்குச்சி நான் வளைச்சி வில்லுவண்டி செய்ஞ்சி தாறேன்
வண்டியிலே வஞ்சி வந்தா வளைச்சி கட்டி கொஞ்ச வார்றேன்

பெண் : ஆலங்குச்சி நான் வளைச்சி பல்லக்கொன்னு செய்ஞ்சித்தார்றேன்
பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சி கொஞ்ச வார்றேன்

ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி

பெண் : கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி

ஆண் : ஊரும் உறங்கட்டும் ஒசை அடங்கட்டும்
காத்தா பறந்து வருவவேன் புதுபாட்டா படிச்சி தருவேன்

பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

ஆண் : பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

ஆண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

 

 

அடி ராக்குமுத்து

Movie Ejamaan Music Ilaiyaraaja
Year 1993 Lyrics Vaali
Singers S. P. Balasubramaniam

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு
அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா
கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கு சுத்தம்மா
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
பெண்குழு : அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

***

வான்சுமந்த வான்சுமந்த வெண்ணிலவ வெண்ணிலவ
தான்சுமந்த தான்சுமந்த பெண்நிலவே பெண்நிலவே
பெண்குழு : மூணு மாசம் ஆன பின்னே முத்துவரும் முத்துவரும்
ஆண்குழு : பூர்வஜென்மம் சேர்த்து வச்ச சொத்துவரும் சொத்துவரும்

வெள்ளிமணி தொட்டில் ஒண்ணு
விட்டத்தின் மேலே மாட்டிடனும்
தங்கமணி கண்ணுறங்க தாலேலோ பாடி ஆட்டிடனும்

குழு : அடி வாடி ரங்கம்மா தெரு கோடி அங்கம்மா
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

***

பெண்குழு : ஏழு சட்டி மார்கழிக்கும் பொங்கவச்சி பொங்கவச்சி
மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடனும் ஏற்றிடனும்

வாரிசு ஒண்ணு தந்தற்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி
ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி ஊத்திடனும் ஊத்திடனும்
அம்மன் அருள் இல்லையின்னா
பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே
பிள்ளை செல்வம் இல்லையென்ற பேச்சுக்கள்
பொய்யாய் போனதிங்கே

குழு : ஊரில் எல்லாரும் ஒண்ணு சேரும் இந்நேரம்
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

ஆண்குழு : அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா

பெண்குழு: கிளி மூக்கு முத்தம்மா அவர் வாக்கு சுத்தம்மா
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

குழு : அடி ராக்குமுத்து ராக்கு ராக்குடியை சூட்டு
காப்பு தங்க காப்பு கை பிடிச்சு பூட்டு





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information