Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 83)                         

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு
`நல்ல நடிகர்; நல்ல மனிதர்'


"ரஜினிகாந்த் நல்ல நடிகர் மட்டும் அல்ல; நல்ல மனிதரும் கூட'' என்று நடிகை குஷ்பு கூறினார்.

தர்மத்தின் தலைவன், மன்னன், பாண்டியன், அண்ணாமலை ஆகிய படங்களில் ரஜினியுடன் நடித்தவர் குஷ்பு.

தமிழ் திரை உலகுக்கு ரஜினிகாந்த் 25 காலம் பணியாற்றியதையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் குஷ்பு எழுதியிருப்பதாவது:-

ரஜினியின் ரசிகை

"பாம்பேயில் இருக்கும்போதே நான் ரஜினி சாரின் ரசிகையாக இருந்தேன். "அந்தாகானூன்'' படத்தில் அவர் நடித்ததைப் பார்த்ததிலிருந்து ரஜினி சார் மீது எனக்கு செம கிரேஸ். ஒரு வித்தியாசமான ஹீரோவாக எனக்குத் தெரிந்தார்.

அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்பு வரை ரஜினி சார் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. படம் பார்த்து, அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகுதான் அவரைப்பற்றி அறிந்து கொண்டேன். தமிழில் பெரிய சூப்பர் ஸ்டார் என்று சொன்னார்கள்.



பாம்பேயிலிருந்து பெங்களூர் வந்து கன்னடப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ரஜினி சார் பற்றி மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அவர் படங்களைப் பார்த்து ஒரு ரசிகையாக எனக்கு ஏற்பட்ட கிரேஸ், பெங்களூரில் அவரைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகு அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையாக வளர்ந்தது.

அழைப்பு

என் ஆசை நிறைவேறும் சூழ்நிலை வெகுவிரைவிலேயே வந்தது. "தர்மத்தின் தலைவன்'' படத்தில் நடிக்க என்னை அப்ரோச் பண்ணினார்கள். அதில் ரஜினி சார்தான் ஹீரோ என்று தெரிந்ததும் கதையைக் கேட்காமல், சம்பளம் பற்றிக் கவலைப்படாமல் உடனே நடிக்க சம்மதம் சொன்னேன்.

திரையில் பார்த்து வியந்த ரஜினி சாரை நேரில் பார்த்தபோது அவரிடம் ஒரு வசீகரம், ஈர்ப்பு சக்தி இருப்பதை என்னால் உணர முடிந்தது.

அந்தப் படத்தில் நடித்த அனைவருமே சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள். நான் மட்டுமே புதுமுகம். அதில் நடிக்கும்போது நான் புதுமுகம் என்ற பீலிங்கே எனக்கு இல்லை. காரணம் ரஜினி சார் என்னை அந்தளவுக்கு டிரீட் பண்ணியதுதான். அவருக்கு சமமாக மதித்து என்னுடன் பழகினார்.

தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினி சார் ஜோடியாக சுஹாசினி மேடம் நடித்தாங்க. நான் பிரபு சாருக்கு ஜோடியாக நடித்தேன். என்றாலும் ரஜினி சார் காம்பினேஷனில் நிறைய சீன்ஸ் இருந்தன. அந்த சீனில் நடிக்கும்போது ஜாலியாக இருக்கும். காரணம் ரஜினி சார் செய்யும் காமெடிதான்!

தர்மத்தின் தலைவன் படத்திற்குப் பிறகு பல படங்களில் நடித்தேன். ஆனாலும் எனக்கு பெரிய வேல் வரவில்லை. அது எனக்கு வருத்தமாகவே இருந்தது. `ரஜினி சாருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்தால் போதும். நீ பெரிய ஸ்டாராகி விடலாம்' என்று சிலர் சொன்னார்கள்.



அண்ணாமலை

எனக்கு சான்ஸ் கேட்க தயக்கமாக இருந்தது. நாமாக சான்ஸ் கேட்பதை விட அவராக சான்ஸ் தருவதுதான் பெருமையாக இருக்கும் என்று நான் நினைத்தேன். `சின்னத்தம்பி' ஹிட்டான பிறகுதான் என் ஆசை நிறைவேறியது. பாண்டியன், அண்ணாமலை என தொடர்ந்து இரண்டு படங்களில் எனக்கு சான்ஸ் கொடுத்தார். `மன்னன்' படத்தில் நான் நடித்தாலும், பாண்டியன், அண்ணாமலை படங்களில் நடித்ததுதான் எனக்கு பெருமை சேர்த்தது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அண்ணாமலை படத்தை என்னால் மறக்கவே முடியாது. பொதுவாக ரஜினி சாருடைய படங்களில் அவருக்கு மட்டும்தான் முக்கியத்துவம் இருக்கும். அண்ணாமலை படத்தில் எனக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தார்.

ஆனந்தக் கண்ணீர்

`கொண்டையில் தாழம்பூ' பாடலில் என்னுடைய பெயரையும் சேர்த்து பாடலை உருவாக்கினார்கள். படம் வெளிவந்தபோது அந்தப்பாடல் காட்சிக்கு கிடைத்த வரவேற்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அண்ணாமலை படம் வந்த நேரத்தில் நான் எங்கு போனாலும் என் முதுகுக்குப் பின்னால் கொண்டையில் தாழம்பூ பாடல்! அப்படி கேட்கும்போதெல்லாம் மானசீகமாக ரஜினி சாருக்கு நன்றி சொல்வேன். அவரால்தானே இத்தனை பெருமை, பாராட்டு என்று நினைக்கும்போது என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கும். இப்படி பலமுறை ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறேன்.

இந்த விஷயத்தை இதுவரை நான் யாரிடமும் சொன்னதில்லை. ஏன்... ரஜினி சாரிடம்கூட நான் சொன்னதில்லை. இப்போதுதான் முதல் தடவையாக சொல்கிறேன்.



இத்தனை நாள் சொல்லாமல் இப்போது சொல்வது ஏன் என்று சிலர் கேட்கலாம். இப்போது சொல்வதுதான் பொருத்தமான நேரம். ரஜினி சாரின் கலை உலக சேவையை நம் நாடே கொண்டாடும் நேரம் இது. இப்போது சொல்லப்படும் கருத்துக்களை ஒவ்வொருவரும் உன்னிப்பாக கவனித்து வருவார்கள். அதனால்தான் இப்போது சொல்ல வேண்டும் என்று தோன்றியது. சொல்கிறேன்.

நல்ல மனிதர்

ரஜினி சார் நல்ல நடிகர் என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். என் அனுபவத்தில் அவர் நல்ல நடிகர் மட்டுமல்ல. நல்ல மனிதர்.

அவருடன் சேர்ந்து நடித்தது என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியம். இதற்கு ஈடான விஷயம் வேறொன்றும் இல்லை. ரஜினி சாரை புகழ வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. என் உள்ளத்தில் இருந்து வரும் உண்மையான வார்த்தைகள் இவை.''

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

(ஏவி.எம். எடுத்த "எஜமான்'' - திங்கட்கிழமை)

***

ரஜினி `சுயதரிசனம்'

"நான் இந்த உலகத்தில் இரண்டே இரண்டு பேருக்கு மட்டும்தான் பயப்படுவேன். அதில் ஒருத்தர் கடவுள். மற்றொருவர் என் மனச்சாட்சி.

இந்த இரண்டு பேருக்கு மட்டும் பயந்தால் போதும். மற்றபடி வேறு யாருக்கும் இந்த உலகத்தில் பயப்படத் தேவை இல்லை.

இதை நான் கற்றுக்கொண்டது, மறைந்த பட அதிபர் சின்னப்ப தேவரிடம் இருந்துதான்.''

- ரஜினிகாந்த்.


Next Page>>> Part 84



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information