Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 73)                         

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?"
ரஜினியிடம் சிவகுமார் கேள்வி



`உங்கள் மனைவியிடம் நீங்கள் கோபித்துக் கொள்வது உண்டா?' என்று நடிகர் சிவகுமார் கேட்ட கேள்விக்கு "இல்லை'' என்று ரஜினி பதில் அளித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன், சினிமா பத்திரிகைக்காக, ரஜினியும், சிவகுமாரும் சந்தித்துப் பேசினார்கள்.

அவர்களின் உரையாடலில் இருந்து சில பகுதிகள்:-

ரஜினி:- ஞாயிற்றுக்கிழமைகளில் வர்ற ரசிகர்களை மீட் பண்றதை வழக்கமா வெச்சிருக்கேன். இன்னிக்கு இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை. இப்பவும் வாசல்ல கூட்டம் இருக்கு. பீச்சுல `ஜாகிங்'போது பார்த்தோம் இல்லியா?

சிவகுமார்:- ஆமாம், இப்பவும் `ஜாகிங்' பண்றீங்களா?

ரஜினி:- வீட்லயே பண்றேன். இப்ப வீடியோ காசட் ஒண்ணு வந்திருக்கு. அதைப் போட்டோம்னா அவங்க சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருப்பாங்க. பீச்சுல போறதுல என்ன அட்வான்ட்டேஜ்னா ப்ரெஷ் ஏர் கிடைக்கும். ஆனா நாலரைக்குள்ள அங்க இருக்கணும். கொஞ்சம் லேட்டாயிடிச்சின்னா கூட்டம் வந்து தொந்தரவு ஆயிடும். மூணு ஆம்பிளைப் பசங்களா உங்களுக்கு?



சிவகுமார்:- இரண்டு பையன், ஒரு பொண்ணு. அது சிஸ்டமாடிக்தான்!

இளமை

ரஜினி:- எல்லாமே பிரின்சிபிள்ஸ்... அது, இது எல்லாமே! முதல் படத்துல உங்களைப் பார்த்தப்போ எப்படி இருந்தீங்களோ அப்படியே இருக்கீங்க. எனக்குச் சில சமயம் ரொம்ப ஆச்சரியமாயிருக்கு.

சிவகுமார்:- நீங்க மட்டும் என்னவாம்?

ரஜினி:- நான் கொஞ்சம் கொஞ்சம். முடியெல்லாம் வெள்ளையாயிட்டே வருது.

சிவகுமார்:- அது எல்லாருக்கும் ஆயிட்டுதான் வருது. அது கணக்கில்லை.

பண்ணின ரோல்கள்ல ஆத்ம திருப்தித் தந்த மாதிரி ஏதாவது?

ரஜினி:- `புவனா ஒரு கேள்விக்குறி' ரொம்ப நல்ல ரோல் அது. உங்களுக்கே தெரியும். நீங்களே எவ்வளவோ சொல்லிக் குடுத்தீங்க. அப்புறம் ரொம்பவும் என்ஜாய் பண்ணி செஞ்ச ரோல் `ஆறிலிருந்து அறுபதுவரை', `எங்கேயோ கேட்ட குரல்'

திருப்தி அளிக்கும் படங்கள்

சிவகுமார்:- எந்த மாதிரி படங்கள் பண்றது உங்களுக்குத் திருப்தியா இருக்கு?

ரஜினி:- எண்டர்டெயின்மெண்ட் வித் ஸம் மாரல்.

சிவகுமார்:- இப்ப நீங்க செய்யற படங்கள்ல அதைச் செய்ய முடியுதா?

ரஜினி:- முடியலை. நிச்சயமா முடியலை. அதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஹீரோயிசம் பண்ணிக்கிட்டு சூப்பர்மேன் மாதிரி பத்துபேரை அடிக்கிறது, இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு.

சிவகுமார்:- எண்டர்டெயின்மெண்ட் படங்கள் பண்ணாம இருக்க முடியாது. நீங்களே சில நல்ல படங்களுக்கு இன்ஸிஸ்ட் பண்ணலாமே? அந்த பொஸிஷன்ல நீங்க இருக்கீங்களே?

ரஜினி:- நான் செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன். பொதுவா டிஸ்ட்ரிப்ட்டர்ஸ் நாலு சண்டை நாலு டான்ஸ் இப்படி இன்ஸிஸ்ட் பண்றாங்க. படம் நல்ல விலை போகுது. அதனால பண்ணித்தான் தீரணும். எல்லாத்தையும் மீறி வருஷத்துக்கு ஒரு நல்ல படமாவது பண்றேன்.

சிவகுமார்:- சில சமயங்கள்ல ஆடியன்ஸ் ரொம்ப கீழே போயிடறாங்க. அவங்களோட டேஸ்ட்டையும் பார்த்துக்கிட்டு சினிமா மூலமா அவங்க ரொம்ப கீழே போயிடாம பார்த்துக்கிற கடமையும் நமக்கு இருக்கு. எம்.ஜி.ஆர். படங்கள்ல அந்த பிராப்ளமே வந்ததில்லை. டயலாக்ஸ்ல நீங்க கொஞ்சம் ஸ்பீடை குறைச்சுக்கணும் ரஜினி. சண்டைக் காட்சிகள்ல காட்டற ஸ்பீட், டயலாக்குலேயும் வந்துடுதுபோல இருக்கு.

ரஜினி:- ரொம்ப டிரை பண்ணி, ஸ்பீடை குறைக்க முயற்சி பண்றேன். ஆனாலும் `டேக்'னு கிளாப் அடிச்சதும், அந்த ஸ்பீட் வந்துடுது. பிகினிங் ஸ்டேஜ்ல தமிழ் சரியா தெரியாததுனால இந்தியில் `பொயிட்ரி' மாதிரி எழுதி வெச்சுக்கிட்டு பை-ஹார்ட் பண்ணிடுவேன். கிளாப் அடிச்சவுடனே மடமடன்னு சொல்லிடுவேன். மனப்பாடம் பண்றதுனால நடுவுல நின்னு போனா ஆபத்தாயிடுமே. அதுவே பழகிப்போச்சு. இந்தியிலயும் ஸ்பீடாத்தான் பேசிட்டிருக்கேன்.

லட்சியப்படம்

சிவகுமார்:- `வீரபாண்டிய கட்டபொம்மன்' மாதிரி ஒரு ரோல் பண்ணணும்னு நான் ஆசைப்பட்டதுண்டு. அந்த மாதிரி ஏதாவது `எய்ம்' உங்களுக்கு உண்டா?

ரஜினி:- ஷூட்டிங் டயத்துலதான் ஆக்டிங் பத்தியே நினைக்கிறேன். வெளியே வந்த பிறகு நினைக்கக்கூட மாட்டேன். ஆரம்பத்துலேர்ந்தே அப்படித்தான். மேக்கப் போட்டு, டிரஸ் போட்ட அப்புறம்தான் புதுசா இதுல என்ன மேனரிசம் பண்ணலாம்னு யோசிப்பேன்.

சிவகுமார்:- குழந்தைக்குன்னு தனியா நேரம் ஒதுக்குறீங்களா?

ரஜினி:- அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. போகும்போது வரும்போது கொஞ்சறதோட சரி.

மனைவியிடம் கோபமா?

சிவகுமார்:- வீட்ல, மனைவியை கோவிச்சுக்கிறது உண்டா?

ரஜினி:- இல்லை, சிவா.

சிவகுமார்:- நான் ரொம்ப கோவிச்சுக்குவேன். அதனால கேட்டேன். `நீங்க என்னங்க, இன்னிக்கு கோவிச்சுக்காமயே போயிட்டீங்களே'ன்னு கேட்கிற அளவுக்கு கோபம் வரும். நீங்க பெங்களூர் போனீங்கன்னா, உறவினர்கள் தவிர வேறு யாரைப் பார்ப்பீங்க?

ரஜினி:- போனவுடனேயே ஈவினிங் ஒரு ஹோட்டல்ல ரூம்போடுவேன். ஒரு ஏழெட்டு பிரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லோரையும் வரச்சொல்லி அரட்டை அடிச்சிக்கிட்டு இருப்பேன். எல்லாம் என்னோட பழைய பிரெண்ட்ஸ். வீட்டுல தங்க முடியாது. அங்கேயும் கூட்டம் வந்திடும்.

சிவகுமார்:- உங்க படங்களைத் தியேட்டர்ல ஜனங்களோட பார்த்த அனுபவம் உண்டா? உங்க நடிப்பை ஜனங்க எப்படி ரசிக்கிறாங்கன்னு எப்படித் தெரிஞ்சுக்கறீங்க?

ரஜினி:- முதல் படத்துக்குப் போயிருந்தேன். அவ்வளவுதான். அப்புறம் நேரமே கிடைக்கலை. உண்மையிலேயே டைம் கிடைக்கலை. ஓரளவு பிரிவிவிலேயே ஒரு ஒப்பீனியன் கிடைச்சிடும்.

இப்ப நான் காலை 9 முதல் மாலை 6 மணி வரை ஒர்க் பண்றேன். சண்டேஸ்ல ஒர்க் பண்றதில்லை. முந்தியெல்லாம் ஒரு படத்துக்கு 18 நாள்தான் குடுப்பேன். அதுக்கப்புறம் 28 நாள் தந்தேன். டப்பிங்குக்கு தனியா டேட்ஸ் தரமாட்டேன். அதுக்குள்ளயே அவுங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். இப்ப இன்னும் சவுகரியமா பண்ணிக்கணும்னு 28 அல்லது 40 நாள் தர்றேன். ரொம்ப அவசியப்பட்டா சாயந்திரம் ஏழிலிருந்து 10 வரை நடிப்பேன். இல்லேன்னா ரெண்டு நாள் வெச்சுக்கலாம்னு சொல்லிடுவேன்.

பணம் இருக்கும். அதை என்ஜாய் பண்ண ஹெல்த் இல்லேன்னா என்ன பிரயோஜனம்?

உணவு

சிவகுமார்:- சாப்பாடு விஷயத்தில் நீங்கள் எப்படி?

ரஜினி:- அரிசி, தயிர் இந்த மாதிரி சமாச்சாரங்கள் ரொம்ப கமமி. சப்பாத்தி சாப்பிடுவேன். அசைவம் ரொம்ப குறைவு. சிக்கன் கூட வீட்டில் பண்ணினா சாப்பிடுவேன். அப்புறம், வீட்டுலே ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொன்னதால் விட்டுட்டேன். நிறைய ஜுஸ் சாப்பிடுவேன். நல்லா சமைச்சா வெஜிடேரியனைவிட நல்ல உணவு எதுவுமே இல்லை. சிவா! பல விஷயங்களில் நீங்கதான் எனக்கு வழிகாட்டி. கால்ஷீட் கொடுக்கிறது, படம் `கமிட்' பண்றது எல்லாமே பக்காவா இருக்கும். அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்.

சிவகுமார்:- ஒரே ஒரு படம் தவிர, நான் ஒத்துக்கொண்ட படங்கள் எக்காரணத்தினாலேயும் நின்றுபோனதில்லை. கடைசி நேரத்திலே என் சம்பளத்தை விட்டுக்கொடுத்துக்கூட, படத்தை முடிச்சுக் கொடுத்திருக்கிறேன்.''

இப்படி சிவகுமார் கூறியதும், "பேசிக்கொண்டே இருந்தோம்னா சாப்பாடு எப்போ? சாப்பிடப் போகலாமா?'' ரஜினி கேட்டார்.

இருவரும் சாப்பிட எழுந்தனர்.


Next Page>>> Part 74



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information