Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 76)                         

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை'
வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது


ரஜினியின் திரை உலகப் பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாகவும், வசூலைக் குவித்த வெற்றிப்படமாகவும் திகழ்வது "அண்ணாமலை.''

இதில் ரஜினியும், குஷ்புவும் ஜோடியாக நடித்தனர். கவிதாலயா (கே.பாலசந்தர்) தயாரித்த இப்படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கினார்.

கதை

"எத்தனை தடைகள் வந்தாலும், தன்னம்பிக்கை உடையவன் போராடி வெற்றி பெறுவான்'' என்பதை எடுத்துக்கூறும் கதை.

அண்ணாமலை என்ற பால்காரன் வேடத்தை தாங்கி நடித்தார், ரஜினி.

அண்ணாமலையும், அசோக்கும் (சரத்பாபு) நண்பர்கள். அசோக் பெரிய பணக்காரன் என்றாலும், அந்தஸ்து பார்க்காமல், இருவரும் உயிருக்கு உயிரான நண்பர்களாகப் பழகுகிறார்கள்.



அசோக்கின் அப்பா (ராதாரவி) நகரின் மத்தியில் ஒரு ஸ்டார் ஓட்டல் கட்ட விரும்புகிறார். அதற்கான இடம் தேடியபோது, அண்ணாமலையின் மாட்டுப் பண்ணையுடன் கூடிய வீடு, ஓட்டல் கட்ட பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறார். அதனால் மகன் அசோக்கை அனுப்பி, அந்த இடத்தை கேட்க வைக்கிறார்.

அந்த இடத்தை பலர் கோடிக்கணக்கில் பணம் தருவதாகச் சொல்லியும், விற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிடிவாதம் காட்டி வந்தான் அண்ணாமலை. ஆனால் நண்பன் கேட்டபோதோ, விலை கூட கேட்காமல், நண்பனின் அப்பா நட்டிய வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடுகிறான்.

அசோக்கின் அப்பா, தனது மகனுக்கும், அண்ணாமலைக்குமான நட்பை பிரிக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறார். ஓட்டல் திறப்பு விழாவுக்கு வந்த அண்ணாமலையை அவமானப்படுத்துகிறார். ஆத்திரம் அடைந்த அண்ணாமலை அசோக்கின் அப்பாவை அடித்துவிட, தனது தந்தையை அடித்த அண்ணாமலையை திருப்பி அடித்து விடுகிறான், அசோக்.

அண்ணாமலையின் வீடு அசோக்கின் ஆட்களால் புல்டோசர் மூலம் இடிக்கப்படுகிறது. நண்பனை நம்பி கையெழுத்துப்போட்ட அண்ணாமலை இப்போது தனது தாயார், தங்கையுடன் நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறான்.

நட்புத் துரோகம், வீட்டோடு நிலத்தை பறிகொடுத்த கோபம் எல்லாம் சேர்ந்து அண்ணாமலையை ஆவேசமாக்குகிறது. நண்பன் அசோக்கை சந்திப்பவன், "உன்னைவிட பணம் படைத்தவனாக உயர்ந்து காட்டுகிறேன்'' என்று சவால் விடுகிறான். சவாலை நிஜமாக்க அண்ணாமலையுடன் அவன் குடும்பமும் சேர்ந்து உழைக்கிறது.

அசோக்கிடம் இருந்த ரவி (நிழல்கள்ரவி) அவனை ஏமாற்றி கையாடல் செய்ததால் துரத்தப்படுகிறான். அவன் அண்ணாமலையிடம் வேலைக்கு சேருகிறான். அவன் மீது ரஜினியின் தங்கை காதல் கொள்ள, ரவியை தனது வீட்டு மாப்பிள்ளையாக்கிக் கொள்கிறான். அண்ணாமலை.



திருமணத்துக்குப்பிறகு தனது சுயரூபத்தைக் காட்டும் ரவி, பணம் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்துகிறான். ஒருநாள் இது அண்ணாமலைக்குத் தெரியவர, அவனை அடித்து துரத்துகிறான்.

இப்போது அண்ணாமலை, அசோக் இருவருக்கும் பொது எதிரியாகிவிட்ட ரவி, அவர்களை பழிவாங்க சரியான தருணம் நோக்கி

காத்திருக்கிறான்.சவாலில் வெற்றி

இதற்கிடையே நண்பன் அசோக்கிடம் விட்ட சவாலில் ஜெயிக்கிறான் அண்ணாமலை. அசோக்கை விடவும் அந்தஸ்தில் உயர்ந்த அண்ணாமலை, தனது சாதுரியம் மூலம் அசோக்கின் செல்வத்தையும், செல்வாக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக சிதறடிக்கிறான். ஒரு கட்டத்தில் அசோக்கின் வீடும் அண்ணாமலையின் கைக்கு வந்து விடுகிறது.

காலம் விரைகிறது. இப்போது அண்ணாமலையின் மகளும், அசோக்கின் மகனும் கல்லூரியில் படிக்கிறார்கள். நட்புடன் பழகி வந்த இவர்களுக்குள் காதல் அரும்ப, மகளின் காதலன் யாரென்று தெரிந்த அண்ணாமலை நொறுங்கிப் போகிறார். மகளின் காதலுக்கு தடை போடுகிறார்.

ரஜினியின் தங்கை கணவன் இப்போது தனது பழிவாங்கும் படலத்தை தொடங்குகிறான். அசோக்கை அடியாட்கள் மூலம் கடத்தி கொல்லத் துணிகிறான். இந்த தகவல் அண்ணாமலைக்குத் தெரியவர, அதுவரை இருந்த பிடிவாதம், கோபம் விலகி, நண்பனை காப்பாற்ற ஓடி வருகிறார். எதிரிகளை துரத்தியடித்து நண்பனை மீட்கிறார். பழைய நட்பு மீண்டும் கைகோர்க்கிறது. நண்பனின் வீட்டை அவனுக்கே திருப்பிக் கொடுத்த அண்ணாமலை, மகளை நண்பன் வீட்டுக்கு மருமகளாக அனுப்பி வைக்கிறார்.

காமெடி காட்சிகள்

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்தக் கதை யில், ரஜினி - குஷ்புவின் ஆரம்ப சந்திப்புகளும், காமெடிக் கலாட்டாக்களும் ரசனையானவை. லேடீஸ் ஹாஸ்டலில் குளிக்கும்போது குஷ்புவை பார்த்துவிடும் ரஜினி, `கடவுளே கடவுளே' என புலம்புவதும், அதன் பிறகு குஷ்புவை பார்க்கும் போதெல்லாம் "கடவுளே கடவுளே'' என சொல்வதும் திரை அரங்குகளை குலுங்கச்செய்த காமெடி.

சரத்பாபுவின் ஜோடியாக அந்நாளைய கதாநாயகி ரேகா நடித்திருந்தார். சரத்பாபுவின் மகனாக வந்தவர் நடிகர் கரண்.



அண்ணாமலை கதையின் மூலம் "குதா காகர்ஸ்'' என்ற இந்திப்படமாகும். அதைத்தழுவி வசனம் எழுதியவர் சண்முகசுந்தரம்.

படத்தின் வெற்றிக்கு, கவிஞர் வைரமுத்து எழுதி தேவா இசை அமைத்த பாடல்களும் முக்கிய காரணம்.

"வந்தேண்டா பால்காரன்'', "அண்ணாமலை அண்ணாமலை! ஆசை வெச்சேன் உண்ணாமலே'', "கொண்டையில் தாழம்பூ'', "வெற்றி நிச்சயம் - இது வேத சத்தியம்'', "ரெக்கை கட்டிப் பறக்குதம்மா அண்ணாமலை சைக்கிள்'' போன்ற பாடல்கள் மூலை முடுக்கில் எல்லாம்

எதிரொலித்தன.முதலில் இந்தப்படத்தை வசந்த் டைரக்ட் செய்வார் என்று கூறப்பட்டது. பிறகு அந்த வாய்ப்பு சுரேஷ் கிருஷ்ணாவுக்கு கிடைத்தது. அவர் "நட்சத்திர இயக்குனர்'' அந்தஸ்தைப் பெற்றார்.

27-6-1992-ல் வெளியான இப்படம், 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.


Next Page>>> Part 77



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information