Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 55)                         

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்''
ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 100-வது படமான "ஸ்ரீராகவேந்திரர்'', ரஜினி அதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது. தனக்கே உரித்தான ஸ்டைல்களையும், அதிரடி சண்டைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ராகவேந்திரராகவே வாழ்ந்து காட்டினார்.

ரஜினிகாந்த், ராகவேந்திரரின் தீவிர பக்தர். எனவே, ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை தனது 100-வது படமாகத் தயாரிக்க முடிவு செய்தார்.

இப்படத்தை, கே.பாலசந்தரின் "கவிதாலயா'' பேனரில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

எஸ்.பி.முத்துராமன் தயக்கம்

இந்தக் காலக் கட்டத்தில், ரஜினியின் பெரும்பாலான படங்களை எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்து வந்தார். எனவே, "ராகவேந்திரர்'' படத்தையும் அவரே டைரக்ட் செய்யவேண்டும் என்று, ரஜினி விரும்பினார். இதுகுறித்து, முத்துராமனிடம் பேசினார்.

டைரக்ஷன் பொறுப்பை ஏற்க முத்துராமன் தயங்கினார். காரணம், இதுவரை அவர் புராணப் படம் எதையும் டைரக்ட் செய்ததில்லை. தவிரவும் அவருடைய தந்தையும், குடும்பத்தினரும் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுள்ளவர்கள். எனவே, `அந்த பாரம்பரியத்தில் வந்த நாம், புராணப் படத்தை இயக்குவது சரியா?' என்ற கேள்வி அவர் மனதைக் குடைந்தது.

முத்துராமனின் தயக்கத்தை ரஜினி புரிந்து கொண்டார். எனினும் வேறு டைரக்டரைப் போட அவர் விரும்பவில்லை.

எஸ்.பி.முத்துராமனை நேராக, கே.பாலசந்தரிடம் அழைத்துச் சென்றார். "ராகவேந்திரர்'' படத்தை டைரக்ட் செய்ய எஸ்.பி.முத்துராமன் தயங்குகிறார். நீங்கள் அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.

அதன்படி, முத்துராமனிடம் பாலசந்தர் பேசினார். புராணப் படங்களை இயக்குவதில் தனக்குள்ள சிரமங்களை முத்துராமன் விளக்கினார்.

இருதரப்பு "வாதங்களையும்'' கேட்ட பாலசந்தர், இறுதியில் தன் "தீர்ப்பை'' வழங்கினார்.

"முத்துராமன்! உங்களுக்குள்ள பிரச்சினை எனக்குப் புரிகிறது. ரஜினியை வைத்து எத்தனையோ மாறுபட்ட படங்களை எடுத்தவர் நீங்கள். இந்தப் படத்தையும் நீங்கள் சிறப்பாக எடுக்க முடியும். ரஜினியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஒப்புக்கொள்ளுங்கள். இந்தப் படத்தை சிறப்பாக எடுக்க கவிதாலயா எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும். உங்கள் விருப்பம் போல் படத்தை எடுக்கலாம். செலவைப்பற்றி கவலை வேண்டாம்'' என்றார், பாலசந்தர்.

முடிவில், ராகவேந்திரர் படத்தை உருவாக்க சம்மதித்தார், முத்துராமன்.

வசனம் - இசை

படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பை ஏ.எல்.நாராயணன் ஏற்றார். அவர் பக்தி சிரத்தையுடன் வசனத்தை எழுதினார்.

வாலி எழுதிய பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்தார்.

ராகவேந்திரர், குழந்தையாகப் பிறப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. குழந்தைக்கு "வேங்கடநாதன்'' என்று பெயர் சூட்டுகிறார்கள்.

வேங்கடநாதன் சிறுவயதிலேயே மிகுந்த புத்திசாலியாகவும், சாஸ்திரங்களில் கரைகண்டவராகவும் விளங்குகிறான்.

ஒருநாள் அவன் பிரசாதமாக வாங்கி வரும் மாம்பழத்தை, கிருஷ்ணன் வாங்கி சாப்பிடுகிறார். வீடு திரும்பும் வேங்கடநாதனிடம், "மாம்பழம் எங்கே?'' என்று தந்தை கேட்க, "கிருஷ்ணன் வாங்கிச் சாப்பிட்டு விட்டார்'' என்று அவன் கூறுகிறான்.

கோபம் கொண்ட தந்தை, "பொய்யா சொல்லுகிறாய்?'' என்று வேங்கடநாதனை அடிப்பதுடன், தோப்புக்கரணம் போடச்சொல்கிறார். "கிருஷ்ணா! கிருஷ்ணா!'' என்று கூறியபடி அவன் தோப்புகரணம் போட, கிருஷ்ணனே வந்து தோப்புக்கரணம் போடுகிறார்.



இக்காட்சியைக் காணும் தாயும், தந்தையும் வேங்கடநாதனின் மகிமையை உணர்ந்து, கிருஷ்ணன் காலடியிலேயே உயிரை விட்டு, சொர்க்கம் அடைகிறார்கள்.

அண்ணன் வீட்டில் வாழும் வேங்கடநாதன், வாலிப வயதை அடைந்ததும் (ரஜினி) கும்பகோணம் சென்று அங்குள்ள மடாதிபதியின் சீடராகிறார். வேத சாஸ்திரங்களை கற்றுத் தேர்ந்து, மதுரைக்கும், பிறகு தஞ்சைக்கும் சென்று அங்குள்ள புலவர்களை வாதத்தால் வெற்றி கொள்கிறார்.

குருவின் யோசனைப்படி, இல்லற வாழ்க்கையை மேற்கொள்கிறார், வேங்கடநாதன். சரஸ்வதி என்ற பெண் (லட்சுமி) அவருக்கு மனைவியாகிறாள். ஒரு குழந்தையும் பிறக்கிறது.

சாதி வேற்றுமைகளைப் பாராது, மாட்டுக்கார சிறுவனை சீடனாக ஏற்றதால், வேங்கடநாதனை அந்த கிராமத்து மக்கள் ஊரை விட்டே விலக்கி வைக்கிறார்கள்.

இதற்கிடையே கும்பகோணம் சென்று, குருவை சந்திக்கிறார். "சம்சார சாகரத்தில் இருந்து மீண்டு, சந்நியாசம் வாங்கிக்கொள். என்னுடைய வாரிசாக இந்த மடத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்'' என்று கூறுகிறார், குரு.

இதற்கு தன் மனைவியின் சம்மதத்தைப் பெற முயற்சிக்கிறார், வேங்கடநாதன். அவள் சம்மதிக்கவில்லை. இதனால் சஞ்சலப்படும் வேங்கடநாதன் முன், சரஸ்வதி தோன்றி, "முன்ஜென்மங்களில் நீ பிரகலாதனாகவும், பின்னர் வியாசராகவும் பிறந்தவன். இந்த ஜென்மத்தில் நீ ராகவேந்திரர்'' என்று கூறி மறைகிறார்.

இதனால், மத்வ பீடாதிபதியாக பொறுப்பேற்கிறார்.

மனம் உடைந்த அவர் மனைவி, குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்து விட்டு கிணற்றில் குதித்து உயிர் விடுகிறாள்.

ஆவியாக தன்னை வந்து சந்திக்கும் அவளை தூய்மையாக்கி, சொர்க்கத்துக்கு அனுப்புகிறார், ராகவேந்திரர்.

பின்னர், நாடு முழுவதும் பிரயாணம் செய்கிறார். எழுதப்படிக்கத் தெரியாத இளைஞனை படிக்கச் செய்கிறார். முஸ்லிம் நவாப், "பரிசாக'' அளிக்கும் மாமிசத்தை மலர்களாக மாற்றுகிறார்.

இப்படி பல அதிசயங்களை நிகழ்த்தும் ராகவேந்திரர், பல ஜோசியர்கள் கூறிய கருத்துக்களை பொய்யாக்கி, 78-வது வயதில் "ஜீவ சமாதி'' அடைகிறார்.

மாறுபட்ட ரஜினி

இந்தப் படத்தில், ரஜினிகாந்த் நடிக்கவே இல்லை. ராகவேந்திரராகவே வாழ்ந்து காட்டினார்.

இளைஞனாக, திருமணம் ஆனவராக, இளம் துறவியாக, நடுத்தர வயதுடையவராக, முதியவராக... இப்படி பல தோற்றங்களில் தோன்றி நடிப்பில் புதிய உயரத்தைத் தொட்டார்.

அவர் மனைவியாக லட்சுமி பொருத்தமாக நடித்தார்.

கவுரவ வேடங்களில், அம்பிகா (ராஜ நர்த்தகி), சோழமன்னன் (மேஜர் சுந்தர்ராஜன்), நவாப் (சத்யராஜ்) போன்றவர்கள் சிறிது நேரமே வந்தாலும், மனதைக் கவர்ந்தனர்.

மற்றும் மோகன், கே.ஆர்.விஜயா, சோமயாஜலு, டெல்லி கணேஷ், மனோரமா, பண்டரிபாய், ஒய்.ஜி.மகேந்திரன், தேங்காய் சீனிவாசன், நிழல்கள்ரவி ஆகியோரும் உண்டு.

அனுபவங்கள்

இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது:-



"ராகவேந்திரர் படத்தை இயக்கும்படி ரஜினியும், பாலசந்தரும் வற்புறுத்தியதால், அந்தப் பொறுப்பை ஏற்றேன். அந்தக் காலக்கட்டத்தில், புராணப் படங்களை தயாரிப்பதில் ஏ.பி.நாகராஜன் மிகவும் புகழ் பெற்றிருந்தார். அவருடைய "திருவிளையாடல்'', "கந்தன் கருணை'', "திருவருட்செல்வர்'' முதலான படங்கள் பெரும் வெற்றி பெற்றிருந்தன.

அவர் எடுத்த படங்களின் "வி.சி.டி''களை வாங்கி அனைத்தையும் போட்டுப் பார்த்தேன். அவற்றைப் பார்த்ததன் மூலம் புராணப்படத்தை இயக்கக்கூடிய மனோபலம் எனக்கு வந்தது. இந்த வகையில் ஏ.பி.நாகராஜனை என்னுடைய மானசீக குரு என்று கூறலாம்.

ரஜினிகாந்த், தன்னுடைய ஸ்டைல்கள் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர். சண்டைக் காட்சிகளில் மிகவும் புகழ் பெற்றவர். இவை எல்லாம் இல்லாமல், ஒரு மகான் வேடத்தில் அவரை ரசிகர்கள் ஏற்பார்களா என்று சந்தேகப்பட்டோம். ராகவேந்திரரின் பலதரப்பட்ட தோற்றங்களில் `மேக்கப்' போட்டு பார்த்தோம். ரஜினி, தன்னுடைய முகபாவம், வேகமான நடை ஆகியவற்றையெல்லாம் மாற்றிக்கொண்டு பக்தி சிரத்தையோடு நடித்தார்.

படப்பிடிப்பு நடந்த காலத்தில் ரஜினி அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்தார். படப்பிடிப்பு குழுவினரும் விரதம் இருந்தோம்.

படம் முடிந்து, முதல் பிரதியை போட்டுப்பார்த்தபோது, "இந்தப் படத்தை எடுத்ததில் பெருமை அடைகிறேன்'' என்று பாலசந்தர் கூறினார். ரஜினிகாந்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ரஜினி ரசிகர்களும் இப்படத்தை ஏற்றுக்கொண்டனர்.''

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

வரிவிலக்கு

1-1-1985-ல் வெளிவந்த இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்தது.

அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை, ரஜினிக்கு சினிமா ரசிகர்கள் சங்கமும், சினிமா எக்ஸ்பிரஸ் இதழும் வழங்கி கவுரவித்தன.

இப்படம் நூறு நாள் ஓடியது.


Next Page>>> Part 56



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information