Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 45)                         

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்த "மூன்று முகம்'', அவருடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தியது.

குறிப்பாக, அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் மிடுக்காகவும், கம்பீரமாகவும பேசி எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.

ஆர்.எம்.வீரப்பனின் "சத்யா மூவிஸ்'' தயாரித்த சூப்பர் ஹிட் படம் இது. கதையை பீட்டர் செல்வகுமார் எழுத, ஆர்.எம்.வி. திரைக்கதை அமைத்தார். பிறகு செல்வகுமார் வசனம் தீட்டினார். ஏ.ஜெகந்நாதன் டைரக்ட் செய்தார்.

கதை

திருப்பங்களும், நெஞ்சைத் தொடும் சம்பவங்களும் நிறைந்த படம் "மூன்று முகம்.''

நேர்மையும், கண்டிப்பும் நிறைந்த போலீஸ் "டி.எஸ்.பி'' அலெக்ஸ் பாண்டியன், தனது எல்லைக்குள் நடமாடும் கள்ளச்சாராய கோஷ்டிகளை களையெடுக்கிறார். இதனால் லட்சக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்கும் கள்ளச்சாராய கும்பலின் தலைவன் (செந்தாமரை) டி.எஸ்.பி.யை கொல்ல முடிவெடுக்கிறான். அதற்கான தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான்.

மர்மக்குரல்

அலெக்ஸ் பாண்டியனன் மனைவி ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலி எடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறா. மனைவியை பார்க்க ஆஸ்பத்திரி வரும் வழியில் அலெக்ஸ் பாண்டியனுக்கு போன் வருகிறது. போனில் பேசிய பெண், ஒரு பாழடைந்த பங்களாவில் தன்னை அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள்'' என்று பதட்டமாய் கூறியவள், தான் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் பங்களா இருக்கும் இடத்தையும் கூறி தன்னைக் காப்பாற்ற வரும்படி கதறுகிறாள்.

இந்தப் போனுக்குப் பின்னணியில் தன்னை கொல்ல வகுக்கப்பட்டிருக்கும் சதித்திட்டம் பற்றி அறியாத அலெக்ஸ் பாண்டியன், தனியாளாய் அந்த பங்களாவுக்குள் போகிறார். அவருக்காக காத்திருந்த சாராயக்கும்பலின் தலைவனும், அவனது அடியாட்களும் அலெக்ஸ் பாண்டியனை தாக்கி கொன்று விடுகிறார்கள்.

இரட்டைக் குழந்தைகள்

அலெக்ஸ் பாண்டியன் இறந்த அதே நேரத்தில் அவரது மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டுமே ஆண் குழந்தைகள்.

குழந்தை பிறந்த அதே நேரம் `ஜன்னி' வந்து தாயும் உயிர் விடுகிறாள்.

பிரசவத்துக்கு துணையாக வந்த அலெக்ஸ் பாண்டியனின் தாயார் சகாயமேரி, மகன் - மருமகள் இருவரும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைகிறார். குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைக்கிறாள்.

அதே ஆஸ்பத்திரியில் பணக்காரர் ஒருவரின் மனைவியும் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை குழந்தை இறந்தே பிறந்ததால், இம்முறையாவது குழந்தை உயிருடன் பிறக்கவேண்டுமே என்ற கவலை. ஆனால் இம்முறையும் குழந்தை இறந்தே பிறக்க, அது தெரியாமல் அவள் மயக்க நிலையில் இருக்கிறாள்.

சகாயமேரியிடம் இருக்கும் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை பணக்காரர் கேட்கிறார். தனது குழந்தை உயிருடன் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே மனைவியை உயிரோடு பார்க்க முடியும் என்று கண்களில் நீர் மல்க அவர் சொன்னதால், இரண்டு ஆண் குழந்தைகளில் ஒன்றை பணக்காரரிடம் சகாயமேரி கொடுக்கிறாள்.

சகாயமேரியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, அவளிடம் இருக்கும் மற்றொரு குழந்தையை வளர்க்க மாதந்தோறும் பணம் அனுப்பி வைக்கிறார்.

சகாயமேரியின் பொறுப்பில் வளரும் குழந்தை `ஜான்' என்ற பெயரிலும், பணக்காரரிடம் வளரும் குழந்தை `அருண்' என்ற பெயரிலும் வளர்கிறார்கள். ஜான் அதிரடி, அடிதடி, ஜாலி என்று உருவாக, அருண் மேற்படிப்புக்காக அமெரிக்கா போகிறான்.



பிறந்த நாள்

படிப்பை முடித்து ஊருக்கு வரும் அருண் தனது 25-வது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடுகிறான். இந்த விழாவுக்கு கள்ளச்சாராய தலைவனின் அடியாளாக இருந்து இப்போது தொழிலதிபர் அந்தஸ்தில் இருக்கும் சங்கிலிமுருகனும் அழைக்கப்பட்டு இருக்கிறார்.

பிறந்த நாள் `கேக்'கை வெட்ட அருண் கத்தியை கையில் எடுக்கும்போது, கேக்கில் ஒரு காட்சி அருண் கண்ணுக்கு தெரிகிறது. அலெக்ஸ் பாண்டியனை கள்ளச்சாராய கும்பலின் தலைவன் செந்தாமரை கத்தியால் குத்துவதாக விரியும் அந்தக் காட்சியை பார்த்த அருண், ஆவேசமாகிறான். தொழிலதிபர் சங்கிலிமுருகனின் சட்டையைப் பிடித்து இழுத்து உலுக்கியவன், "எங்கேடா உங்க பாஸ்?'' என்று கேட்கிறான்.

இந்த தகவல் செந்தாமரைக்குப்போக, அவர் துப்பறிந்து அலெக்ஸ் பாண்டியன் சாய லில் இருக்கும் அருண், பணக் காரரின் மகனல்ல, அலெக்ஸ் பாண்டியனின் மகனே என்பதை அறிந்து கொள்கிறார். இதனால் அவனையும் கொன்றுவிட திட்டம் தீட்டுகிறார். இதற்குள் அருணுக்கும் தனக்குள் தோன்றிய அந்த திடீர் உணர்வுக்கு விடை கிடைக்கிறது. தங்கள் அலுவலக பொறுப்பை மேற்கொள்ளும் அருண், சகாயமேரி என்ற பெண்ணுக்கு தனது அப்பா மாதாமாதம் பணம் அனுப்பி வரும் தகவலை தெரிந்து கொள்கிறான். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு சகாயமேரியின் இருப்பிடம் வருகிறான். அங்கே வந்த பிறகுதான், அலெக்ஸ் பாண்டியனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் தானும் ஒருவன் என்ற உண்மை தெரியவருகிறது.

பழிக்குப்பழி

இரட்டை சகோதரர்கள் தங்கள் தந்தையை கொன்ற செந்தாமரை கும்பலை பழிவாங்க புறப்படுகிறார்கள். இதில் ஜான் முந்திக்கொண்டு, கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த செந்தாமரையின் ஆட்களை வெறியுடன் கொல்கிறான். விபரீதம் உணர்ந்த செந்தாமரை, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஜானை கத்தியால் குத்தி சாய்க்கிறார். அந்தக் கத்தியை பிடுங்கி செந்தாமரையின் வயிற்றில் கத்தியை பாய்ச்சுகிறான் ஜான்.

செந்தாமரை உயிரை விட்டுவிட, குற்றுயிராய் கிடக்கும் ஜானை தனது மடி மது தூக்கி வைத்து கதறுகிறான் அருண். தனது தந்தையை கொன்ற கும்பலை பழிதீர்த்த நிம்மதியில், தம்பி அருணின் மடியில் உயிரை விடுகிறான், ஜான்.

மூன்று வேடங்களில் நடித்த ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். அலெக்ஸ் பாண்டியனுக்கு ராஜலட்சுமி, அருணுக்கு ராதிகா. ஜானுக்கு ஜோடி இல்லை.

வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த இந்தப்படம் மகத்தான வெற்றி பெற்றது. மூன்று வேடங்களையும், வெகு எளிதாக ஊதித்தள்ளி, ரசிகர்களைக் கவர்ந்தார், ரஜினி.

இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர்கள் சங்கர்-கணேஷ்.


Next Page>>> Part 46



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information