Related Articles
நடிகர் நடிகை சங்க கண்டனக் கூட்டத்தில் ரஜினி
கமல் 50 பிரமாண்ட பாராட்டு விழாவில் தலைவர் ரஜினி
என் குருநாதர் பாரதிராஜாவைவிட ரஜினிக்கு என் குடும்ப உறவுகள் மேல் அதிக அட்டாச்மென்ட் - மணிவண்ணன
Director Shankar interview on Enthiran movie and new movie stills
Superstar Rajinikanth at South Indian Cinema artists 80s theme party
மக்களுக்கு பயன் தரக் கூடிய பல சமூகப் பணிகளில் ரஜினி ரசிகர்கள்
மணிவண்ணன் மகள் திருமணத்தை சூப்பர் ஸ்டார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்
10 Reasons to watch Sultan, The Warrior
சூப்பர் ஸ்டார் ரஜினி விஜிபி இல்லத் திருமண விழாவில்
சூப்பர் ஸ்டாருடன் ஒரு சிலிர்க்க வைக்கும் இமயமலைப் பயணம்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
லாபத்தை பங்கிடுவதில் முதலாளி எப்படி இருக்கவேண்டும்? - FEFSI மாநாட்டில் ரஜினியின் பன்ச்
(Friday, 9th October 2009)

சினிமா தொழிலாளர்களின் அகில இந்திய 9 வது மாநில மாநாடு சென்னையில் துவங்கி நடைபெற்றுவருகிறது. காலை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகளை மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், நடிகர் கமல்ஹாசன், பிரபல ஹிந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா, பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், தாசரி நாராயண ராவ் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி

மாலை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதிக்கு உலக கலை படைப்பாளி விருது வழங்கப்பட்டது.  கே.பால்ச்சண்டர் வரவேற்று பேசினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராஜேஷ் கண்ணா, நாகார்ஜுனா, மம்மூட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

சூப்பர் ஸ்டார் குறைந்த நேரம் பேசினாலும் வழக்கம் போல தனது பொருள் செறிந்த பேச்சால் அசத்திவிட்டார். விழாவில் பேசிய பெப்சி நிர்வாகிகள் முதல்வருக்கு பெப்சி தொழிலாளர்களுக்கு நிலம் ஒதுக்குவது தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.

சூப்பர் ஸ்டார் வழக்கம்போல அசத்தலாக தனது பேச்சை துவக்கினார்.

“இங்கு பேசிய பெரும்பாலானவர்கள் தொழிலாளர்களுக்கு நிலம் ஒதுக்குவது தொடர்பாக கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்க்கு முன்பு ஜெயலளித்த அவர்கள் முதல்வராக இருந்தபோது இத்தே பெப்சி மாநாடு ஒன்று நடைபெற்றது. அப்போதும் இதே போன்று கோரிக்கை வைத்தீர்கள். அவர்களும் உடனே செய்வதாக சொன்னார்கள். ஆனால் நீங்கள் அங்கு வேண்டாம்.. இங்கு வேண்டாம்… என்று அவர்கள் ஒதுக்குவதாக கூறிய இடத்தை எல்லாம் தட்டிகழித்துவிட்டீர்கள். இப்போ அந்த இடங்களின் விலை எங்கோ சென்றுவிட்டது. அப்பொழுதே நீங்கள் வாங்கிக்கொண்டிருந்திருக்க வேண்டும். இப்பொழுதாவது முதல்வர் கொடுப்பதை உடனே ஏற்றுக்கொள்ளுங்கள்.”

“அப்புறம் இது தொழிலாளர்கள் மாநாடு என்பதால் ஒரு விஷயத்தை கூற ஆசைப்படுகிறேன். தான் சம்பாதிக்கும் லாபத்தை மொத்தமும் தனக்கே எடுத்துக்கொள்ளும் முதலாளி அயோக்கியன். 75% தனக்கு எடுத்துக்கொண்டு 25% தொழிலாளர்களுக்கு கொடுப்பவன் கொள்ளைக்காரன். 50% தனக்கு எடுத்துக்கொண்டு 50% கொடுப்பவன் தான் நாணயஸ்தன். அவர்களை அந்த ஆண்டவன் சந்தோஷமாக வைத்துக்கொள்வான். நூறு சதவீதத்தையும் யாராலும் கொடுக்கமுடியாது. அது அந்த ஆண்டவனால் மட்டுமே முடியும். நீங்கள் உங்கள் தொழிலாளர்களுக்கு 50 சதவீதத்தையாவது கொடுங்கள். சந்தோஷமாக இருப்பீர்கள்.”

(இந்த உரை விபரத்தை அந்த விழாவிற்கு சென்ற என் நண்பர்களிடம் கேட்டு  அவர்கள் கூறியதை வைத்து அளித்திருக்கிறேன்.  இது என் வீட்டில் பணி முடிந்து வந்து நான் எழுதுவது. நான் நேரடியாக கேட்டு எழுதுவதல்ல. கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனால் பேசிய ESSENCE இது தான்.)

முதல்வர் கருணாநிதி பேசுகையில், பெப்சி தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக பலத்த கரகோஷத்துக்கிடையே அறிவித்தார். முதல்வர் மேலும் பேசுகையில், “ரஜினி கமல் இருவரையும் எனக்கு கடந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும். இருவரும் எனது இரு கண்களைப் போன்றவர்கள். இப்படி சொல்வதால் மற்றவர்கள் தவறாக நினைக்கவேண்டாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு அவயம் தான்.” என்றார்.

 

 

 






 
4 Comment(s)Views: 942

suresh.k,india/pudukkottai
Monday, 12th October 2009 at 05:01:00

excellent speech, every leaders should follow.
boopathi,India
Monday, 12th October 2009 at 03:59:54

Amazing man toooooooo good.
jaychandran,malaysia
Friday, 9th October 2009 at 21:40:34

plz translate to english. thx
Sridhar ramachandran,
Friday, 9th October 2009 at 21:25:27

Ss is true to his words and actions. But for ss, kalignar would not have become again during the time of badsha. Ss is single but a very strong guy . Ss may not have a formal organisation behind him but he has the love, affection, support from millions of common people- unheard of even with mgr. Great...

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information